ஒரே நாளில் 434 பேர் பாதிப்பு
இன்று தமிழகத்தில் (15 மே 2020 ) புதிதாக 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 10,108 ஆகவும், பலி எண்ணிக்கை 71 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 49 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் 4 பேரும், தூத்துக்குடியில் ஒருவரும் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 11,672 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 359 பேர் குணமடைந்து வெளியே அனுப்பியுள்ளார்கள். மொத்தம் நோய் தொற்று சரியானவர்களின் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,435 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.