கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்த வெட்டுக்கிளிகளால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வட மாநிலங்களில், கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம், நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில், நேற்று மாலை ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்தன. இந்த வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களில் இருந்ததை போல பழுப்பு நிறத்தில் இருந்ததால் விவசாயிகளும், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வெட்டுக்கிளிகள் குறித்து வேப்பனஹள்ளி தி.மு.க எம்.எல்.ஏ., முருகன் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இரவாகி விட்டதால், நேற்று யாரும் நேரலகிரி கிராமத்துக்கு செல்லவில்லை.
இன்று வேளாண் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.