அரசுப் பகை மூட்டல் மற்றும் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டுதல், ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடுதல் ,ஒரு பிரிவினரை தூண்டி , சினம் ஊட்டி, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் முயற்சித்தல், தேசத்தின் மாண்பு மற்றும் இறையாண்மையை குலைக்கும் வகையில் செயல்படுதல் மற்றும் பேசுதல் ஆகிய குற்றங்களுக்காக மன்சூர் அலிகான் என்பவர் மீது புகார் அளித்தல் சார்பு.

மேற்கண்ட மன்சூர் அலிகான் என்ற நபர் சினிமா நடிகராக உள்ளார் . இவர் ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர் என்றும் அறியப்படுகிறது.
வள்ளுவர் கோட்டம் அருகே 19.12.2020 அன்று நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .( வீடியோ link https://youtu.be/pWe9P7IbbnE )
அதில், கோரானா பரிசோதனை சளி மாதிரியை எடுத்து உலகில் எங்குமே செய்யப்படவில்லை, அரசாங்கம் வேண்டுமென்றே இல்லாத கோரானாவை சொல்லி மக்களை ஏமாற்றுகிறது என்றும், இந்த நாட்டை ஆளுகிற பஞ்ச பரதேசிகளா , கொலைகார பாவிகளா என்றும், பாரதமாதா dress போடாமல் செக்ஸியாக செல்லுகிறார் என்றும், எல்லாவற்றையும் ஆட்டிக்கொண்டு பசு என்கிற பாரதமாதா செல்கிறார் என்றும் , மேலும் உலகத் தலைவர் மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மிகவும் கொச்சையாக அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டும் விமர்சித்து பேசியுள்ளார்.
நமது தேசத்தின் வடிவமாக பார்க்கப்படுகிற பாரதமாதா பற்றியும், நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் மீதும் கொச்சையான அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடும் ,இந்த தேசத்தின் மீது இழி உணர்வை தூண்ட வேண்டும் என்ற குற்ற மனத்தோடும், மக்களிடையே இந்த தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், அவ்வாறு அவதூறுகளை பரப்பி தேசப்பற்றாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் தூண்டி சின மூட்டி கலவரத்தை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இவ வாறு மேற்கூறப்பட்ட நபர் பேசியுள்ளார். மேலும் தேசப்பற்றாளர்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும் ,தேசத்தின் மாண்பு மற்றும் இறையாண்மையை குலைக்கும் வகையிலும் இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது.
கோரானா தொற்றுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் தற்காப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்கத்தில், அது பற்றிய அவநம்பிக்கை மற்றும் வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்றும் மேற்கண்ட பேச்சு பேசப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட மன்சூர் அலிகான் என்ற நபர் மீது இந்திய தண்டனை சட்டம் 124(A), 153(A), 153(B), 270, 271, 294, 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505,188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் தேசப்பணியில் , அ.அஸ்வத்தாமன் பாரதிய ஜனதா கட்சி,