செய்திகள் • March 09, 2026

வங்கதேசத்தில் ஹிந்து கோவிலில் குண்டு வீச்சு தாக்குதல்; அர்ச்சகர் உட்பட பலர் காயம்

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீப காலமாக சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் காலகட்டத்தில் கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் சொத்து அபகரிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் பதிவாகின.

இதற்கிடையில், கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி. கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், கூமில்லா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் மாலை நேர பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கோவிலின் தலைமை அர்ச்சகர் கேசவ் சக்கரவர்த்தி கடுமையாக காயமடைந்தார். மேலும் அங்கு இருந்த சில பக்தர்களும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Open full site