சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீது நடவடிக்கை : ராகுல்காந்தி பேரணி!!!
சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீது எடுத்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், ஆனந்த் சர்மா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சரத்யாதவ் ஆகியோர் இந்த பேரணியில் பங்கேற்றார்கள்.
பேரணியாக சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இதேபோன்று இந்தியாவின் பல இடங்களில் நாடு முழுவதும் சி.பி.ஐ. அலுவலகம் முன் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.