செய்திகள் • February 07, 2026

சத்தீஸ்கர் – ஒடிசாவில் நக்சல் ஒழிப்பு வேகம்: 66 நக்சலைட்டுகள் சரண்

நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை மார்ச் 31க்குள் முழுமையாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் பஸ்தார் பகுதியில் இன்று 51 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கான தகவலுக்கு ரூ.1.61 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஒடிசாவில் 15 நக்சலைட்டுகள் சரண் அடைந்த நிலையில், அவர்களிடமிருந்து ஏகே-47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். சரணடைந்த நக்சலைட்டுகளை சமூக வாழ்வில் மீண்டும் இணைக்க அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

Open full site