செய்திகள் • March 04, 2026

துபாயில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – தீ விபத்து, உயிரிழப்பு இல்லை

துபாயில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ட்ரோன் தாக்குதலால் தூதரக வளாகத்தின் ஒரு பகுதியில் சிறிய அளவில் தீப்பற்றியது. உடனடியாக அவசர சேவை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். அங்கு பணியாற்றி வந்த அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

துபாய் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், நிலைமை முழுமையாக கட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் பதற்ற நிலை தொடரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Open full site