தவிர போடி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டியில் தலா 4 முதல் 5 கி.மீ., துாரத்திற்கு 3 பைபாஸ் சாலைகள் அமைக்கப்படும். இந்த ஒவ்வொரு நகரத்தையும் கடக்க 15 முதல் 20 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இப்பணிகள் முடிந்தால், தற்போதைய நேரம் மூன்றில் ஒரு பங்காக குறையும்.
தரையில் கேபிள் பதித்தல், நீரை வெளியேற்றுதல், ஓட்டல், வாகன பார்க்கிங், ஓய்வறை போன்ற பணிகளுக்காக 260 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். ஒன்பது சிறிய பாலங்கள், இரண்டு ரயில்வே மேம்பாலங்கள், 52 வாய்க்கால் மேம்பாலங்கள் கட்டப்படும்.என்.எச். 85ல் நான்கு வழிச்சாலை அமைக்காத பகுதிகளை கணக்கிடும் பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன.
இன்னும் 3 மாதங்களில் இப்பணிகள் நிறைவடையும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கான டெண்டர் 2019 மார்ச்சில் அறிவிக்கப்படவுள்ளது. 2019 இறுதிக்குள்
பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.