காசா பகுதியில் அமைதி மற்றும் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச அமைதி வாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவின் பங்கு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வருமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயண தேதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த மாதம் இந்த பயணம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.