லோக்சபாவில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சில எம்பிக்களின் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். பிரதமர் மோடியின் இருக்கையை நோக்கி சில எம்பிக்கள் நகர்ந்ததை நாடு பார்த்ததாகவும், தாக்குதல் சம்பவம் ஏற்படக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பிரதமர் அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.