கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. லோக்சபா எம்.பி. Shashi Tharoor கேரள மாநில தேர்தல் பிரசார குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் தற்போது Pinarayi Vijayan தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. மாநில தேர்தல் பிரசார குழுத் தலைவராக மூத்த தலைவர் Ramesh Chennithala நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் Mallikarjun Kharge மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi ஆகியோரை சசி தரூர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கட்சியுடன் இணக்கமான அணுகுமுறையை அவர் கடைப்பிடித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, மாநில தேர்தல் பிரசார குழுவின் இணைத் தலைவராக அவரை நியமித்துள்ளது காங்கிரஸ் தலைமை. இந்த நியமனம் மூலம் சசி தரூருக்கு மீண்டும் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.