செய்திகள் • October 25, 2018
4 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை!!!
கோவில்பட்டியில் 4 மணி நேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வே துறை.
பொதுவாகவே நமது நாட்டில் எந்தவொரு அரசாங்க பனி நிறைவடைய சில வருடங்கள் தேவைப்படும். இதுதான் இதுவரை நமக்கு கிடைத்த அனுபவங்கள்.
அதிசயம் ஆனால் உண்மை என்பது போல 4 மணி நேரத்தில் ரயில் பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைத்து , உடனடியாக போக்குவரத்து செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் லட்சுமி மில் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க மேம்பாலம் அமைத்த பின்னரும் , அங்கே இருந்த கிராஸ்ஸிங்கை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கிராஸ்ஸிங்கை அகற்றினால் தங்கள் ஊருக்கு செல்ல அதிகமான தொலைவு பயணிக்க வேண்டும் என்பது அவர்களது கவலை.
அதனை போக்குவதற்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தது ரயில்வே துறை. ஆனால் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் இந்த சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அதனால் மிகக்குறைந்த கால அவகாசத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
எனவே மிகைத்திறமையாக 4 மணி நேரத்தில் சுரங்கப்பாதையை முடித்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் அற்பணிக்கப்பட்டது .
[embed]https://www.youtube.com/watch?v=oKEMfibSqgA[/embed]
Open full site