திருப்பூர்: திருப்பரங்குன்றம் பகுதியில் மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
சமீபத்தில், “தடையை மீறி தீபம் ஏற்றுவோம்” என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இதை மறுத்த காடேஸ்வரா சுப்ரமணியம், தீபம் ஏற்றும் எந்தத் திட்டமும் அமைப்பிற்கு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், முருகனின் முதல் படைவீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் செல்வதே திட்டம் எனத் தெரிவித்துள்ளார். தவறான தகவல்கள் பரவினால், அரசு தரப்பில் இருந்து நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கிரிவலம் மட்டுமே நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.