Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 28 Oct 2018

வீட்டுச் சுவரில் நாய் உச்சா போனதால், பெண் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

சென்னை-: நங்கநல்லூரில் நாயை கூட்டிக்கொண்டு நடைபயிற்சி சென்ற பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர் நங்கநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுகுணா அவருடைய நாயுடன் காலையில் நடைபயிற்சிக்கு சென்றார். சக்தி என்பவரது வீட்டருகே சென்ற நாய் சத்தமாக குரைத்து மற்றும் அவரது வீட்டுச் சுவரில் சிறுநீர் கழித்ததால்,இதனால் ஆத்திரமடைந்து நாயை அழைத்து வந்த சுகுணாவை இரும்பு கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார் இதனால் சுகுணா படுகாயம் அடைந்தார். சுகுணா தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசார் தேடல்: இரும்பு இரும்பு கம்பியால் தாக்கிய சக்தியை தற்போது போலீசார் தேடிவருக்கின்றனர். சக்தி தலைமறைவாக இருப்பதால், அவரது அண்ணனை மடிப்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்