Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 27 Oct 2018

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கல்வீசித் தாக்கினால் கடுமையான நடவடிக்கை - பிபின் ராவத்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ தலைமைத்தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை. காஷ்மீரின் அனந்த்நாக்கில் எல்லைப் பகுதியில் சாலை கட்டுமான பணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்த அதிரடிப் படை வீரர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில். உத்தரகாண்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ராஜேந்திர சிங் தலையில் அடிபட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியது: காஷ்மீரின் வளர்ச்சியை சீர்குலைக்கும் விதமாக இது வேண்டுமென்றே பாகிஸ்தான் ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். பலமுனைத் தாக்குதல் நடத்தவும் முழு பலத்துடன் காத்திருக்கிறோம்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்