Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
விளையாட்டு • 18 Jan 2026

மிட்செல் – பிலிப்ஸ் அபார சதம்; இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 337 ரன் குவிப்பு

இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் தீர்மானிக்கும் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. ஆரம்ப விக்கெட்டுகள் விரைவாக சரிந்தபோதிலும், மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் இணைந்து இந்திய பவுலர்களை திணறடித்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் 209 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். மிட்செல் 137 ரன்களுடன் நான்காவது சதத்தை பதிவு செய்தார்; பிலிப்ஸ் 106 ரன்களுடன் அதிரடி சதம் விளாசினார். இறுதியில் பிரேஸ்வெல் 28 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்