செய்திகள் •
15 Nov 2018
மீண்டும் பிரதமர் மோடிக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் - நாராயணமூர்த்தி
மோடியின் கடுமையான உழைப்பிற்கு நாம் மீண்டும் அவருக்கு ஒருமுறை வாய்ப்பு தர வேண்டும்.
மத்திய அரசு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடி மிகவும் கடுமையாக உழைக்கின்றார். மத்திய அரசு மட்டத்தில் லஞ்ச புகார் குறித்து நான் அரிதாகவே கேள்விப்படுகிறேன். மோடி பிரதமராக தொடர்வது நம் இந்தியாவிற்கு நல்லது. ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சில விஷயங்களை அமல்படுத்தும் போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிரதமர் மோடியை குற்றம் சுமத்துவது சரியான குற்றச்சாட்டல்ல. இந்த பாரதிய ஜனதா அரசு மீண்டும் தொடர மக்களாகிய நாம் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் . கடந்த ஐந்து ஆண்டுகளை பார்க்கும் போது, நாட்டைப் பற்றி அதிகம் அக்கறையோடும் , கட்டுப்பாடு குறித்து கவலைப்படும், சுத்தம் குறித்து கவலைப்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படும் ஒரு தலைவர் இருக்கிறார் என உணர முடிகிறது. இந்த அரசு தொடர்வது நல்ல விஷயமாகவே இருக்கும். இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.