சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 2-வது டவர் பிளாக்கின் பின்புறம் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் இன்று காலை சுமார் 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனைத் தொடர்ந்து, 4 தீயணைப்பு வாகனங்களும், குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணி தீவிரம்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதோடு சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் அங்கே பதற்றம் ஏற்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.