அகமதாபாத்,
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இந்திய அணி ஒரு ஓவர் குறைவாக வீசியதையடுத்து கள நடுவர்கள் நடவடிக்கை எடுத்தனர். பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் கோலி தாமதமாக பந்து வீசியதை ஒப்புக்கொண்டார். தவறை ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததையடுத்து, இதுபற்றி மேற்கொண்டு விசாரனை நடைபெறவில்லை.