சாம்சன் அதிரடி 89: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை பைனலுக்கு இந்தியா
டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 253/7 ரன் குவித்தது.
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 42 பந்தில் 89 ரன் குவித்தார். அவர் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இஷான் கிஷான் 39 ரன், ஷிவம் துபே 43 ரன் மற்றும் ஹர்திக் பாண்ட்யா 27 ரன் எடுத்து அணிக்கு வலுவான ஸ்கோரை வழங்கினர்.
254 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி ஜேக்கப் பெத்தல் சதம் (105 ரன்) அடித்தும் வெற்றியை பெற முடியவில்லை. இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் கட்டுப்படுத்தி இங்கிலாந்தை 246/7 ரன்னில் தடுத்து நிறுத்தினர்.
இந்த வெற்றியுடன் இந்திய அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நான்காவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 8 அன்று ஆமதாபாத்தில் நடைபெறும் பைனலில் இந்தியா நியூசிலாந்தை சந்திக்க உள்ளது.