மலேசியா அரசு பயணம் நிறைவு: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
மலேசியாவில் இரு நாள் அரசு பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்தப் பயணம் இந்தியா–மலேசியா உறவுகளை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மலேசியாவில் இரு நாள் அரசு பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்தப் பயணம் இந்தியா–மலேசியா உறவுகளை வலுப்படுத்தும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்-யுஜி நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு அதிக வருமானமும், உலக சந்தைகளில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
செனாப் நதியில் ரூ.5129 கோடியில் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்கள் பயன் பெறுகின்றன என்பதை முழு பட்டியலுடன் பார்க்கலாம்.
சூடானில் துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 24 பொதுமக்கள் உயிரிழந்தனர். உள்நாட்டு போர் காரணமாக மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது
சத்தீஸ்கர் பஸ்தாரில் 51 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர். ஒடிசாவில் மேலும் 15 பேர் சரணடைந்த நிலையில், நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன
நேபாளம் பைதாடி மாவட்டத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மத வழிபாட்டுத்தலத்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 69 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 169 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.
ஒடிசா சந்திப்பூர் தளத்தில் இந்தியாவின் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை அக்னி–3 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 3,500 கி.மீ. தூரம் வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, இந்திய பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரித்துள்ளது.
மதுரை ஜீவா நகரில் பள்ளி மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசி, பயங்கர ஆயுதங்களுடன் தெருக்களில் உலாவிய சம்பவம் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு திமுக அரசும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் என பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஓலா, ஊபர் போன்ற தனியார் டாக்சி நிறுவனங்களுக்கு மாற்றாக, கூட்டுறவு முறை அடிப்படையில் செயல்படும் ‘பாரத் டாக்சி’ சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். கமிஷன் இல்லாத சேவை மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
லோக்சபாவில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கக்கூடும் என தகவல் கிடைத்ததால், அவர் அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அரசு டாக்டர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், கொரோனா காலத்தில் சேவை செய்த டாக்டர்களை திமுக அரசு அவமதித்து வருவதாகவும் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையில் உள்ள காளியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி ஓராண்டாக தங்கி பனியன் நிறுவனங்களில் வேலை செய்த 13 வங்கதேசத்தினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஜீவா நகரில் சமூக வலைதளங்களில் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வீசிய பள்ளி மாணவர்கள் உட்பட 7 சிறார்கள் கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு பிப்ரவரி 12, 13 தேதிகளில் தமிழகம் வர உள்ளனர்.
மணிப்பூரின் புதிய முதல்வராக பாஜவை சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து புதிய அரசு அமைந்துள்ளது.
மியான்மரில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் கோல்கட்டா, டாக்காவிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி : இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 50% வரி, 18% ஆக குறைக்கப்பட்டு கூடுதல் அபராத வரி நீக்கப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் திட்டத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு முழுமையாக வழங்கவில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை–பெங்களூரு, சென்னை–ஹைதராபாத் வழித்தடங்களில் பயண நேரம் குறையும் எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை 18% ஆக குறைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு, 140 கோடி மக்களின் சார்பில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் உற்பத்தித் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செமிகண்டக்டர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் தைப்பூச விழா பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. பால்குடம், காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.
2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு பார்லிமென்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது மத்திய பட்ஜெடாகும்.
பயனர்களின் மொபைல் போன்களை பயன்படுத்தி கோடிக்கணக்கான போலி எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ‘விங்கோ’ மொபைல் செயலியை மத்திய அரசு தடை செய்துள்ளது.
சென்னையில் கொல்லப்பட்ட பீஹார் குடும்ப வழக்கில், இளம்பெண் முனிதா குமாரி மீது பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்றும், தலையில் இரும்பு கம்பியால் அடித்ததே மரணத்திற்கு காரணம் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஏப்ரல் 30க்குள் முழுமையாக முடிவடையும் என கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து வராமல் போகும் பக்தர்களை கட்டுப்படுத்த, முன்பதிவு கட்டணம் உயர்த்துவது குறித்து கேரள உயர் நீதிமன்றம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
சோழர் மற்றும் பாண்டியர் மன்னர்களின் பாரம்பரியத்தை அவமதித்ததாக திருமாவளவனுக்கு எதிராக அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏ.ஐ. மாநாடு உலகளவில் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 16 முதல் 20 வரை டில்லியில் மாநாடு நடைபெற உள்ளது.
2026 ஏஐ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலில், முக்கிய துறைகளில் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ சட்டத்தை முறையாகப் பின்பற்றாத காவல் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள மரிஜூவான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பஞ்சாபில் 42 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், கடத்தல் வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.
சென்னை தரமணி பகுதியில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி குடும்பம் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மற்றும் முன்னாள் பாஜ தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜய் அரசியல் நிலைப்பாடு, திமுக ஆட்சியின் செயல்பாடு, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இன்றே தேர்தல் நடந்தால் யார் வெல்வார் என்பதுவரை தினமலர்–சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முக்கிய முடிவுகள்.
அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இதில் எந்த அரசியல் சதியும் இல்லை என்றும், இது முற்றிலும் ஒரு துயரமான விபத்தே என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக 1,250 சாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிப்பால் சுற்றுலா பயணிகள் பல இடங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சனாதன தர்மத்தின் மதிப்புகளை புறக்கணிக்கும் அரசுகள் இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவு. உற்பத்தி, வேளாண், சேவைத்துறைகளுக்கு பெரும் ஊக்கம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தான் விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து UAE திடீரென விலகியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இதை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் மற்றும் உறைபனி காரணமாக 15 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது; விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மெக்சிகோ குவானாஜீவாடோ மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயம் அடைந்தனர்
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கர்நாடகாவில் தடை செய்யப்பட்டிருந்த பைக் டாக்சி சேவையை மீண்டும் தொடங்க அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
காசா புனரமைப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வருமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயண தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்லும் விதிமுறைகள் எளிதாக்கப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் மற்றும் NOC பெறுதல் இனி ஆன்லைனில் எளிதாக முடியும்.
மத வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்று இல்லாமல் கட்டட அனுமதி வழங்கும் அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கூடுதல் வர்த்தக வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக கைவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்து, மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்
குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படையை தலைமையேற்று வழிநடத்தும் முதல் பெண் அதிகாரியாக 26 வயதான சிம்ரன் பாலா வரலாறு படைத்துள்ளார்
சென்னை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டசபையில் பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாகக் கூறி கவர்னர் ரவி வெளியேறிய நிலையில், மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு, முதலீடு, கல்வி, தற்கொலை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டதாக லோக் பவன் கடும் அறிக்கை வெளியிட்டுள்ளது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கில், தமிழகம், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து, இம்முறை கவர்னர் ரவி முழு உரையை வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
அஜந்தா–எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளது.
பேரிடர் நேரங்களில் உயிர்களை பாதுகாக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் சேவையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். NDRF வீரர்களின் திறமை மற்றும் கடமையுணர்வு உலகளாவிய அளவில் பாராட்டப்படுவதாக அவர் கூறினார்.
தர்மம் நிலைத்திருக்கும் வரை இந்தியா விஸ்வகுருவாக தொடரும் என்றும், ஜாதி ஒழிப்பு மனநிலையிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் மிரட்டல் தொடர்ந்ததை அடுத்து, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்தும் முடிவை ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ளது.
வளர்ச்சி மற்றும் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தும் அரசுகள் மக்களால் தண்டிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி சிலிகுரியில் தெரிவித்தார்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை தொடர்ந்து, மருத்துவர்கள் குடியிருப்பில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவர் தமிழில் எக்ஸ் பதிவில் புகழாரம் சூட்டினார்.
மும்பை மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று தொடங்கிய நிலையில், பாஜ தலைமையிலான மஹாயுதி கூட்டணி முன்னிலையில் உள்ளது. முழு முடிவுகள் மதியத்திற்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என கூறினார். மேலும் தனது புதிய படம் ஏப்ரலில் தொடங்கும் என அறிவித்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம் பிடித்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசை வென்றார். 12 சுற்றுகளில் 937 காளைகள் களமிறங்கிய இந்தப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட ஒரு நூலை, எந்த நீதிமன்ற உத்தரவும் இன்றி போலீசார் பறிமுதல் செய்த சம்பவம், தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் குறித்து கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
சபரிமலையில் மகரவிளக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகரஜோதி இன்று மாலை பொன்னம்பலமேட்டில் ஒளிவிட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷத்துடன் ஜோதி தரிசனம் செய்தனர்.
பிஷ்னோய் கும்பலுடன் இந்தியா தகவல் பகிர்ந்ததாக கனடா போலீஸ் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், எந்த ஆதாரமும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் இந்தியா–கனடா உறவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் சக்தியை அதிகரிக்கும் வகையில் ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் 114 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மேக் இன் இந்தியா மற்றும் உள்நாட்டு ஆயுதங்கள் இதில் முக்கிய அம்சமாக உள்ளன.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கர்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், 28 வயதான ஹிந்து ஆட்டோ டிரைவர் சமீர் தாஸ் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாக்காளர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றன. அரசியல் களத்தில் பரிசு அரசியல் சூடுபிடித்துள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. முழு விவரம்.
புதுடில்லியில் போலீசார் சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேச நாட்டவர்களை கைது செய்தனர்.
பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் பேசியபோது பயங்கரவாதத்தை எதிர்க்க மேலும் உறுதியான கட்டமைப்பு குறித்து கருத்தாக்கினார்.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்கிறது. சம்பளம் பிடித்தம் செய்தாலும் போராட்டம் கைவிடப்படாது என ஆசிரியர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.
தெற்காசிய நாடுகளில் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சி ஏற்பட இந்தியாவின் தலைமையே அவசியம் என இலங்கை எம்.பி. நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
ஏமனின் சோகோட்ரா தீவில் போர் பதற்றம் காரணமாக சிக்கித் தவித்த இந்தியப் பெண் ரக்கி கிஷன் கோபால், இந்திய தூதரகத்தின் முயற்சியால் சவூதி அரேபியா வழியாக இன்று இந்தியா திரும்பினார்.
வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக உலக சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. அதே நேரத்தில் பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி உடல்நலக்குறைவு காரணமாக புனேயில் காலமானார்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 9, 10 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து $50 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்களை ஆப்பிள் ஏற்றுமதி செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 125 கிராம் தங்க பசையை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ.93 லட்சம் மதிப்புள்ள தங்கத்துடன் பெண் பயணி கைது செய்யப்பட்டார்.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைகள் அவரது தொலைநோக்கு சிந்தனையை பிரதிபலிக்கின்றன என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இல்லத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட இலக்கு தாக்குதலா என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள படேசெட்டி கிராமம், 11 நக்சலைட்டுகள் ஒரே நேரத்தில் சரணடைந்ததை தொடர்ந்து மாநிலத்தின் முதல் நக்சல் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி, வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் கிராமத்தில் வேகமாக நடைமுறைக்கு வந்துள்ளன.
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி நியமிக்காமல் திமுக அரசு காலதாமதம் செய்வது ஆட்சிக்கு ஆபத்து என்ற பயத்தால்தான் என சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜ மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, பாஜ–அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என உறுதியளித்தார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதிய கோரிக்கையை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலின் ரியோ கிராண்டே நெடுஞ்சாலையில் பேருந்து லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவரான ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மோடி தமிழில் மரியாதை செலுத்தியுள்ளார்.
ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தெலுங்கானாவைச் சேர்ந்த இந்திய மாணவர் தோக்லா ஹிர்திக் ரெட்டி உயிரிழந்தார். சங்கராந்தி பண்டிகைக்காக சொந்த ஊர் வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
மலப்புரம் அருகே உள்ள காலணி உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஆலையின் பெரும் பகுதி எரிந்து சேதமடைந்தது. 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.5,000 ரொக்கப் பணமும் விவசாய பொருட்களும் வழங்க வேண்டும் என திமுக அரசை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
2025 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ₹1.75 லட்சம் கோடியை எட்டியது. இது கடந்த ஆண்டை விட 6.1 சதவீத வளர்ச்சியாகும்.
டிஆர்டிஓவின் 68வது நிறுவன தினத்தையொட்டி, இந்திய பாதுகாப்பை வலுப்படுத்தும் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
வான்கூவரில் இருந்து டில்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்க இருந்த விமானியிடம் ஆல்கஹால் வாசனை வந்ததால், கனடா அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில் முதன்முறையாக இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சிப் பிரிவைச் சேர்ந்த ஒட்டகங்கள், குதிரைகள், நாய்கள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கும் அனுமதி.
CBSE 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மார்ச் 3ம் தேதி நடைபெற இருந்த சில தேர்வுகள் நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு மொழிப் பாடங்கள் மார்ச் 11ம் தேதிக்கும், பிளஸ் 2 சட்டப் பாடத் தேர்வு ஏப்ரல் 10ம் தேதிக்கும் நடைபெறும்.
இந்தியா–ரஷ்யா இடையே ‘ஷெல்ப் எம்’ எனப்படும் மைக்ரோ அணு உலை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 10 மெகாவாட் திறன் கொண்ட இந்த சிறிய அணு உலை தொலைதூர பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க உதவும்.
சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் அருகே, சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசை கண்டித்து கோஷங்கள் எழுந்தன.
ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மத்திய ஆய்வகம் உறுதி செய்துள்ளதாக மாநில கால்நடை துறை அமைச்சர் சிஞ்சு ராணி தெரிவித்தார். கோழி இறைச்சி, முட்டை பயன்பாட்டுக்கு தற்போது எந்தத் தடையும் இல்லை.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த மண்ணில் ஸ்ரீ ராமர் சிலை அமைத்து கோயில் கட்டும் பணிக்கு இந்து தமிழர் கட்சி தலைமை சார்பில், கடலூரில் இருந்து பூஜை செய்த புனித செங்கல் அனுப்பும் விழா நேற்று நடைபெற்றது.
வரும் லோக்சபா தேர்தல், தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில் மக்கள், தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டும்
சீறிப்பாய்ந்த காளைகள் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில்
அரைகுறை ஆடையுடன் மதுபோதையில் காரின் பக்கவாட்டில் நின்று கொண்டே ஆட்டம் போட்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது
சென்னையில் 2019 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் மட்டும் 7 பேர் உயிரிழந்து உள்ளார்கள் மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
பொங்கலன்று வெளிவரவுள்ள ரஜினிகாந்தின் "பேட்ட" அஜித்தின் "விசுவாசம் " ஆகிய இரு படங்கள் ரசிகர்கள் இடையே facebook மற்றும் twttter ஆகியவற்றில் பெரிய வார்த்தை போர்
சென்னை மெரினாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதுத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணையத்தில் நம்பர் ஒன் இடத்தில் அஜித்தின் விஸ்வாசம் முன்னோட்டம்.
பாட்டாளி மக்கள் கட்சி 2018 ல் செய்த பணிகள் மற்றும் போராட்டங்கள் ....
மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் உடை மாற்றுவதை ரகசிய கேமரா வைத்து விடியோ எடுத்துள்ளனர்.
துன்பத்தை துறந்தவன், துரோகத்தை துறந்தவன் , சண்டையை துறந்தவன், சச்சரவை துறந்தவன் தான் துறவி!!!
"சாமி இருக்க வேண்டிய கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பின் காரணமாக ஆசாமிகள் இருக்கிறார்கள்"