செய்திகள் •
20 Dec 2018
மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்க்கு வைகையாற்றில் இருந்து தண்ணீர்
மதுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்க்கு வைகையாற்றில் இருந்து தண்ணீர் வரும் போது தெப்பக்குளம் நிறையும் வகையில் அந்த காலத்தில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அதற்க்கு அடையாளமாக தெப்பக்குளம் அருகில் உள்ள புன்னவன நாடார் கல்யாண மண்டபம் முன் பழமையான தண்ணீர் வரும் கல்கட்டம் நந்தியோடு இன்றும் இருக்கிறது.
மற்றொரு தண்ணீர் விழும் கட்டிடம் முக்தீஸ்வர் கோயில் கடைசியில் உள்ளது.
இந்த இரண்டு பாதைகள் இன்றும் உள்ளன, தெப்பகுளத்தில் தண்ணீர் வடபகுதியில் , தென்பகுதியில் சிங்கமுக குழாய், முதலை வாய் குழாய் இதற்கு சாட்சியாக இருக்கிறது.
வைகையிலிருந்து இயற்கையாக தெப்பக்குளத்தில் வந்த பாதையை சரி செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பம்பு செய்து தண்ணீர் கொண்டு வருவதால் கழிவுநீர் சேர்த்து வருகிறது, ஒவ்வொரு முறையும் பம்பு செய்வதற்கு ஆகும் செலவு இல்லாமல் ஆக்கலாம், மதுரை மாநகராட்ச்சி உடனடியாக நடவடிக்கை வேண்டும்.
வைகை நதி மக்கள் இயக்கம்.தலைமை ஒருங்கிணைப்பாளர் M.ராஜன்
இந்த இரண்டு பாதைகள் இன்றும் உள்ளன, தெப்பகுளத்தில் தண்ணீர் வடபகுதியில் , தென்பகுதியில் சிங்கமுக குழாய், முதலை வாய் குழாய் இதற்கு சாட்சியாக இருக்கிறது.
வைகையிலிருந்து இயற்கையாக தெப்பக்குளத்தில் வந்த பாதையை சரி செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பம்பு செய்து தண்ணீர் கொண்டு வருவதால் கழிவுநீர் சேர்த்து வருகிறது, ஒவ்வொரு முறையும் பம்பு செய்வதற்கு ஆகும் செலவு இல்லாமல் ஆக்கலாம், மதுரை மாநகராட்ச்சி உடனடியாக நடவடிக்கை வேண்டும்.
வைகை நதி மக்கள் இயக்கம்.தலைமை ஒருங்கிணைப்பாளர் M.ராஜன்