செய்திகள் •
08 Feb 2026
மலேசியா அரசு பயணம் நிறைவு: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
இரு நாட்கள் அரசு முறை பயணமாக மலேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிமை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பியுள்ளார். இந்தப் பயணம் இந்தியா–மலேசியா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.