Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 06 Feb 2026

நேபாளத்தில் கோர பஸ் விபத்து: பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி, 30க்கும் மேற்பட்டோர் காயம்

நேபாளத்தின் பைதாடி மாவட்டத்தில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த உடனே போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, இரவு முழுவதும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்