Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 25 Oct 2018

255 கோடி மதிப்புள்ள நீரவ்மோடியின் சொத்துகள் முடக்கம்

வங்கி கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த குஜராத் மாநிலத்தின் தொழிலதிபர் நீரவ் மோடியின் ஹாங்காங் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு வாங்கிய கடனை கட்டாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்ட நீரவ் மோடியின் மீது தொடுக்கப்பட்ட புகார் ஆகும். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையினர் ஹாங்காங்கில் உள்ள நீரவ்மோடியின் நகைக்கடை மற்றும் அதிலுள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை முடக்கி உள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 255 கோடி வரும் என்றும் அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர். இதற்கு முன்பு நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்