செய்திகள் •
02 Feb 2026
பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு: திமுக அரசின் கல்விக் கொள்கை தோல்வி – அண்ணாமலை குற்றச்சாட்டு
கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படாததே இதற்குக் காரணம் என்றும், தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து அரசியல் லாபத்திற்காக கொண்டு வரப்பட்ட திமுக அரசின் கல்விக் கொள்கை தோல்வியடைந்ததாகவும் அவர் விமர்சித்தார்.
வரும் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் அரசுப் பள்ளிகளின் தரம் மீட்டெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
- நமது நிருபர் -
⬅ முந்தைய