ஸ்ரீவில்லிப்பத்தூர் ஆண்டாள் கோவில் கோலம் அழிப்பு விவகாரம்: H. ராஜா கண்டிப்பு
இந்துக்களின் வழிபாட்டு தளங்களில் போடப்படும் தாமரை மா கோலங்களை அழிக்க சொன்ன டி. எஸ்.பி யால் சர்ச்சையாகிறது இந்த விவகாரம்
தொடர்ந்து இந்துக்களின் வழிபாட்டு தளம் மற்றும் இந்துக்கள் திருமணங்கள் குறித்தும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொஞ்ச நாள் முன்பு ஒரு இஸ்லாமிய திருமண திருமண விழாவில், இந்துக்களின் திருமணம் பற்றி கொச்சை படுத்தி பேசியது நினைவில் இருக்கலாம்.
மேலும் திருப்புவனத்தில் இஸ்லாமிய மதமாற்றத்தினை தட்டி கேட்ட ராமலிங்கம் பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிப்பத்தூர் ஆண்டாள் கோவிவில் கோலம் அழிப்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H. ராஜா அவர்கள் டுவிட்டரில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிப்பத்தூர் ஆண்டாள் கோவிவில் மகாலட்சுமி வீற்றிருக்கும் தாமரை கோலம் டி.எஸ்.பி உத்தரவால் அழிக்கப்பட்டுள்ளது இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடும் வரம்பு மீறிய செயல். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாரபட்சமாக செயல்படுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்து தமிழர் கட்சியின் சார்பில் மா கோலத்தை அழிக்க உத்தரவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உயர்திரு
சத்திய பிரதா சாகு இ .ஆ .ப
அவர்களிடம் 15.03.2019 வெள்ளிகிழமை சென்னை தலைமை செயலகத்தில் கோரிக்கை புகார் மனுவை சமர்ப்பித்தார் இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார்.
