பாகிஸ்தான் விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய UAE – இந்தியாவுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டின் முக்கிய விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மேற்கொண்டது.
ஆனால், சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தில் இருந்து UAE அரசு திடீரென விலகியுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் உள்ள நிர்வாக சிக்கல்கள் மற்றும் ஒத்துழைப்பு குறைபாடுகள் இதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன. இந்த முடிவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவிற்கு அவசர பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் UAE எடுத்துள்ள முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
மேலும், UAE சிறைகளில் இருந்த 900 இந்திய கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளதுடன், அவர்களின் அபராதத் தொகையையும் அந்த அரசே ஏற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள், UAE தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.