Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 30 Aug 2019

பச்சிளம் குழந்தை ராஜஸ்தானுக்கு கடத்த இருந்த கிருத்துவ பாதிரியார்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பச்சிளம் குழந்தை  ராஜஸ்தானுக்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி அரசு மருத்துவமனையில் கிறிஸ்டி என்ற பெண், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை உடல்நலக்குறைவு காரணமாக அனுமதித்துள்ளார். குழந்தையின் தாய் என்று கூறியதால் கிறிஸ்டியின் வயதையும், உருவத்தையும் பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் கிறிஸ்டியை பிடித்து விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ருக்குமணியாபுரத்தை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட 16 வயது சிறுமியுடைய குழந்தை என்றும், புளியங்குடியில் உள்ள சூர்யா என்ற தனியார் மருத்துவமனையில் பிறந்த அக்குழந்தை விலைக்கு விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்த சூர்யா மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரின் ஓட்டுநராக வேலை செய்யும் இம்மானுவேல் என்பவர் கிறிஸ்டியின் சகோதரியின் கணவர் ஆவர். அவர் மூலம் தான் குழந்தை விற்கப்பட்டுள்ளது.

குழந்தையை கிறிஸ்டியும், ராஜஸ்தானை சேர்ந்த அவரது கணவரான பாதிரியார் வல்ராமும் ராஜஸ்தானுக்கு கடத்திச் செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கிறிஸ்டி, அவரது கணவர் வல்ராம், இம்மானுவேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்