காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் காஜா கனிக்கு அரசியல் தொடர்பு சர்ச்சை – நிர்வாகம் நோட்டீஸ்
சென்னையில் இயங்கும் காயிதே மில்லத் கல்லூரியில் தமிழ்துறை தலைவராக பணியாற்றும் பேராசிரியர் காஜா கனி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தில் அரசு ஊதியம் பெறும் பேராசிரியர் ஒருவர் அரசியல் கட்சி தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்பது சட்டப்படி ஏற்றதா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதேவேளை, தன்னிடம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காஜா கனி, தாம் அரசியல் நோக்கில் அல்லாமல் சமூக கோரிக்கைகளை முன்வைக்க மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பு குறித்து குரல் எழுப்பியதற்காகவே தம்மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் கல்வித்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.