செய்திகள் •
05 Feb 2026
மதுரை ஜீவா நகர பெட்ரோல் குண்டு சம்பவம்: மாணவர்கள் ரவுடிகளாக மாறுகிறார்களா? – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
மதுரை ஜீவா நகரில் ஐந்து பள்ளி மாணவர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் தெருக்களில் உலாவிய காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மாணவர்கள் ரவுடிகளாக மாறிக் கொண்டிருப்பது சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து எனக் குற்றம்சாட்டினார்.
அரசு பள்ளிகளின் நிலையும், அங்கு பயிலும் மாணவர்களின் எதிர்காலமும் சீரழிந்து வருவதாக கூறிய அவர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் இந்த விவகாரத்தில் மௌனம் காத்திருப்பது வெட்கக்கேடானது என கடுமையாக சாடினார்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய