செய்திகள் •
04 Feb 2026
மணிப்பூரில் புதிய அரசு: முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்பு
மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்து, பாஜ தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது. பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட யும்னம் கெம்சந்த் சிங், கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வர்களாக நெம்சா கிப்ஜென் மற்றும் லோசி திகோ ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மணிப்பூரில் நீண்டகால அரசியல் நிலையற்ற நிலைக்கு முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
- நமது நிருபர் -
⬅ முந்தைய