செய்திகள் •
26 Oct 2018
கடன் கேட்டு நாடு, நாடாய் அலையும் பாக்கிஸ்தான் அதிபர் - முதலில் சவூதி
பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த நாட்டின் டாலர் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதால் இந்த வருட கடைசிக்குள் செய்த இறக்குமதிக்கு பணம் (டாலர்) செலுத்த முடியாத நிலை வரும்.
அதனால் அந்த நாட்டின் அதிபர் இம்ரான் கான் , மற்ற நாடுகளிடம் கடன் கேட்டு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். முதலாக சவுதி சென்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக 3 பில்லியன் டாலர் பணமாகவும் , 3 பில்லியன் டாலர் கச்சா எண்ணெய் வாங்கிய பணத்தை தாமதமாகவும் கொடுக்கவும் ஒப்புதல் பெற்றுள்ளார்.
இந்த உதவி பாகிஸ்தானை மீட்குமா அல்லது இந்த கடனுக்கு சவுதி நாடு விதித்துள்ள நிபந்தனைகளால் மேலும் சிக்கலில் மட்டுமா என்பதை காலம் தான் சொல்ல முடியும்.
உலகநாடுகள் கொடுக்கும் நிதியை தீவிரவாதத்துக்கு பயன்படுத்தியதால் வந்த நிலைமை
- நமது நிருபர் -
⬅ முந்தைய