அரசு பள்ளியில் 10 ஆண்டுகளாக தேசியக்கொடி ஏற்றுவது இல்லை
இது சென்னை எல்லீஸ் ரோடு தாயார் சாகிப் தெருவில் அமைந்துள்ள அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி .
இங்கு கடந்த 10 ஆண்டுகளாக தேசியக்கொடி ஏற்றுவது இல்லையாம் . தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவது இல்லையாம்.
தற்போது அந்த பள்ளியில் எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால் தினசரி ஒரு மணிநேரம் குரான் வகுப்பு நடத்தவேண்டுமாம்.
இன்று( 19.07.2019 )இந்த பள்ளியில் தேசிய கீதம் பாடல் பாடியிருக்கிறார்கள் .தகவல் அறிந்த இஸ்லாமியர்கள் பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக குரல் எழுப்பியதுடன் D 1 காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் . அதில் (புகாரில் )இந்த பள்ளியில் 99.9 சதவீதம் இஸ்லாமிய மாணவர்கள்தான் படிக்கிறார்கள் என்றும் இந்த பள்ளி சிறுபான்மையினருக்காகதான் அரசு கட்டிக் கொடுத்துள்ளது எனவும். தற்போது பாசிச அரசு தனது அடக்குமுறையை திணிக்கபார்க்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த பள்ளியில் எங்கள் கலாச்சாரம் மட்டுமே பின்பற்றபட வேண்டும் எனவும் எங்கள் மாணவிகளுடன் மாணவர்களை ஆசிரியர்கள் அமர வைத்து விட்டனர் ஆகவே தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.
பஸ் மறியல் போராட்டம் செய்ய முயன்றவர்களை காவல்துறை சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.