செய்திகள் •
21 Dec 2018
பள்ளிக் கூடமா? கிறிஸ்தவ மதமாற்ற கூடமா?
மாணவர்களை மதமாற்ற முயற்சிக்கும் ஜெப கூட்டத்தை தடுத்து நிறுத்துக.
இந்து மக்கள் கட்சி தமிழகம் - கோரிக்கை
"இயேசு விடுவிக்கிறார் " வாலிபர் ஊழியம் வழங்கும் திருச்சியில் 2019 அச்சீவர்ஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை இடம் :csi john vestry ஸ்கூல் கிரவுண்ட் மத்திய பேருந்து நிலையம் அருகே திருச்சி நாள் :ஜனவரி 6 நேரம் மாலை 5.30மணி முதல் 8 மணி வரை தலைமை பேராயர் D.சந்திரசேகரன் CSI -திருச்சி - தஞ்சை திருமண்டல பேராயர் . செய்தியும் ஜெபமும் மோகன் சி லாசரஸ் என்ற விளம்பர அறிவிப்பு திருச்சியில் வெளியாகி இருக்கிறது . மாணவர்கள் தேர்வில்வெற்றி பெற்று சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ சபை கூட்டத்தை மேற்படி பாதிரியார். மேலே குறிப்பிட்ட பள்ளிக்கூட வளாகத்தில் ஏற்பாடு செய்கிறார். அரசு உதவி பெறக்கூடிய சிறுபான்மை கல்வி நிறுவனம் என்கின்ற அந்தஸ்தோடு செயல்படக்கூடிய இந்த பள்ளி கூடம், மதமாற்றம் செய்வதையே தன்னுடைய வாழ்நாள் பணியாகச் செய்து கொண்டிருக்கக் கூடிய தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி சார்ந்த மோகன் சி லாசரஸ் என்கின்ற கிறித்தவ பாதிரியாரை அழைத்து செய்யும் ஜெபமும் செய்ய இருப்பதாக தெரியவருகிறது. மோகன் சி லாசரஸ் என்ற பாதிரியார் சமீபத்தில் சர்ச்சைக்குரிய இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் இந்து வழிபாட்டு தலங்கள் குறித்தான அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார் . "இந்து கோவில்கள் எல்லாம் சாத்தான்கள் குடி கொள்ளும் இடம் " என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது வருடத்திற்கு 25,000 நபர்களை நான் கிறிஸ்துமதமாற்றம் செய்கிறேன் என்று கூட ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் . அப்பாவி மக்களிடம் ஏழ்மை, வறுமை, இயலாமை போன்றவற்றை பயன்படுத்தி "கர்த்தர் அனைத்தையும் உனக்காக தருவார். இயேசுவை நம்புங்கள் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் " என்று ஆசை வார்த்தை கூறி, இந்து மத நம்பிக்கைகளை சிதைத்து கிறிஸ்தவத்திற்கு வர வைப்பதில் வல்லவர். அதாவது கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதில் ஆகச்சிறந்த பாதிரியார் இந்த மோகன் சி லாசரஸ். இப்படி மதமாற்றம் செய்யக்கூடிய ஒரு மத வியாபாரி மோகன் சி லாசரஸ் அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சியில் இந்த கிருத்தவ பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஒரு ஜெபக்கூட்டம் நடக்குமேயானால் அப்பாவி மாணவர்களின் மனதில், "இயேசு எல்லாம் செய்ய வந்தவர் " நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று, அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால் "இயேசு பிரானை போற்றி துதியுங்கள்" என்று மதப்பிரச்சாரம் செய்து மாணவர்களுடைய மனதில் மாற்றத்தை உருவாக்கி , பின்னர் மதமாற்றம் செய்வதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அரசு நிதி உதவியோடு செயல்படக்கூடிய இந்த சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் அனைத்து மாணவர்களும் தான் படித்து வருகிறார்கள் . அப்படி இருக்கையில் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ மதப் பிரச்சார கரை அழைத்துவந்து தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? அதற்காக நாங்கள் ஜெபக்கூட்டம் நடத்துகிறோம் என்று சொன்னால் அது முழுக்க முழுக்க கிறிஸ்தவ மதத் திணிப்பு ஆகும் . நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் நிச்சயமாக தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவார்கள் . ஆனால் நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இயேசுநாதர் தான் உதவி புரிந்தார் என்று சொன்னால்எப்படி இருக்கும் ? இல்லை நாங்கள் அனைத்து மத மாணவர்களுக்கும் பொதுவானவர்கள் கிறித்தவ மதத் திணிப்பு இல்லை என்று இந்த கிருத்துவ பாதிரியார் சொல்வாரேயானால் , அதே பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தேர்வில்வெற்றி பெறுவதற்காக சரஸ்வதி கூட்டு வழிபாடு, "ஹயக்ரீவர் ஜெப வழிபாடு" நடத்துவதற்கு மேற்படி பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்குமா? அப்படி வழங்கினால் இந்த நிறுவனம் கிறித்தவ மதமாற்ற நிறுவனம் இல்லை என்பது நிரூபணமாகும். இல்லையென்றால் பள்ளிக்கூட மைதானத்தை மதமாற்ற கூடமாக மாற்றிய கொடுஞ்செயலுக்கு அரசாங்கமே ஆதரவு தெரிவிப்பது போல் ஆகிவிடும் . நாங்கள் கிறித்தவ மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல . உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருக்குமானால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய பாதிரியார் கிறிஸ்தவ திருச்சபைகளில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக கூட்டுவழிபாடு என்று சொன்னால் நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை. அது இல்லாமல் இப்படி ஒரு பள்ளி மைதானத்தில் நடத்துவது தான் நாங்கள் எதிர்க்கிறோம். குறிப்பாக பாதிரியார் மோகன் சி லாசரஸ் அவர்கள் இந்த கோவில்களில் இந்து வழிபாட்டு முறைகள் அவமதித்து பேசினார் மதக் கலவரங்கள் முயற்சித்தார் என்று திருச்சி காவல் நிலையத்தில் ஏற்கனவே இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு, எப்.ஐ.ஆர் . போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது நாகை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு காவல் நிலையங்களில் அவர் மீது எப்ஐஆர் ஆர் போடப்பட்டுள்ளது. அரசும் பள்ளிக்கல்வித்துறை . மாணவர்களை மதமாற்ற நிகழ்ச்சி கூடிய மோகன் சி லாசரஸ் அவர்கள் கலந்து கொள்ளக்கூடிய மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். (இந்த செய்தியை படிக்கக்கூடிய ஒவ்வொரு இந்து ஆர்வலரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் திருச்சி அவர்களுக்கும் மதிப்பிற்குரிய திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும் இது சம்பந்தமாக புகார் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மோசடி மதமாற்றம் தடுத்திட ஹிந்து மதம் காத்திட அனைவரும் பணி செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.)
இராம. இரவிக்குமார் மாநில பொதுச்செயலாளர் இந்து மக்கள் கட்சி தமிழகம் 86430_81430 96553 - 65696
- நமது நிருபர் -
⬅ முந்தைய
இராம. இரவிக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
86430_81430
96553 - 65696