செய்திகள் •
15 Dec 2018
திருக்கழுக்குன்றத்தில் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த சிவலிங்கம் சேதம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா கருங்குழி போகும் வழியில் நெரப்பாக்கம் என்கின்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ,தொன்மை மிகுந்த அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீ கால கண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது .
இந்த சிவதலத்தை சீரமைத்து குடமுழுக்கு செய்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சிவனடியார்களால் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது .
இந்த நிலையில் சமூக விரோதிகளால் சிவன் விக்ரஹம் சிதைக்கபட்டு , உடைக்கப் பட்டுள்ளது .
சிவத்தலத்தை சீர்குலைத்த சமூகவிரோதிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது மட்டுமல்லாது,
சிவ துரோகம் செய்த குற்றத்திற்காக கடுமையான நடவடிக்கை தமிழக அரசு உட்படுத்தவேண்டும்.
எந்த இடத்தில் சிவன் ஆலயம் பாலாலயம் செய்யப்பட்டதோ
அந்த இடத்தில் மீண்டும் பிரமாண்டமான வடிவில் சிவாலயம் அமைக்க கூடிய வேலையை இந்து மக்கள் கட்சி தமிழகம் சிவனடியார்களோடு
சேர்ந்து மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
சிவத்தலத்தை சீர்குலைத்த சமூகவிரோதிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது மட்டுமல்லாது,
சிவ துரோகம் செய்த குற்றத்திற்காக கடுமையான நடவடிக்கை தமிழக அரசு உட்படுத்தவேண்டும்.
எந்த இடத்தில் சிவன் ஆலயம் பாலாலயம் செய்யப்பட்டதோ
அந்த இடத்தில் மீண்டும் பிரமாண்டமான வடிவில் சிவாலயம் அமைக்க கூடிய வேலையை இந்து மக்கள் கட்சி தமிழகம் சிவனடியார்களோடு
சேர்ந்து மேற்கொள்ளும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய