செய்திகள் •
14 Jun 2019
எங்களுக்கு தனித் தனி வீடு வேண்டும் தமிழக எம்.பி.,க்கள்
புதுடில்லி: தமிழகத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி.,க்கள் தனித் தனி வீடு வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் லோக்சபா தேர்தலில், வெற்றி புதிய, எம்.பி.,க்களுக்கு, நவீன வசதிகளுடன், டில்லி நார்த் அவென்யு பகுதியில், 36 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடு 'பிளாட்' அடிப்படையில, நவீன லிப்ட், மாடுலர் கிச்சன் என சகல வசதிகளுடன் உள்ளது. இந்த குடியிருப்புகளில் பாதுகாப்பும் அதிகம்.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ், எம்.பி.,க்கள் சிலர், 'எங்களுக்கு தனித் தனி வீடாக வேண்டும். சுதந்திரமாக இருக்க வேண்டும். எங்களை, யார் யார் பார்க்க வருகிறார்கள் என யாருக்கும் தெரியக்கூடாது' என நினைக்கின்றனர். அதனால, பழைய வீடாக இருந்தாலும், தனி வீடாக ஒதுக்க வேண்டும் என கேட்கிறார்கள்.
என்ன காரணமாக இருக்கும் ? கடவுளுக்கே தெரியும்
- நமது நிருபர் -
⬅ முந்தைய