செய்திகள் •
04 Feb 2026
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 13 வங்கதேசத்தினர் கைது
திருப்பூர் நகரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த 13 வங்கதேச குடிமக்களை போலீசார் கைது செய்தனர்.
காலேஜ் ரோடு ரங்கநாதபுரம், எஸ்.பி.நகர் பகுதிகளில் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த நால்வரை வேலம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் மற்றும் விஜயாபுரம் பகுதிகளில் தங்கியிருந்த மேலும் ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நகரில் மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
- நமது நிருபர் -
⬅ முந்தைய