Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 15 Jan 2026

அனைவரும் நலமாக இருக்க வேண்டும் – பொங்கலில் ரஜினியின் மனம் நெகிழும் வாழ்த்து

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் நல்லா இருக்கணும். குறிப்பாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடே மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.

மேலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ள தனது புதிய படம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும், அது ஒரு முழுமையான கமர்சியல் எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்றும் ரஜினி தெரிவித்தார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்