Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 03 Jan 2026

ராணி வேலுநாச்சியார் பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி: இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த வீராங்கனைகளில் ஒருவரான ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழில் வெளியிட்டுள்ள தனது பதிவில், ராணி வேலுநாச்சியார் துணிச்சலும் வியூகத் திறமையும் கொண்ட தலைவராக விளங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகத் தைரியமாக கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், நல்லாட்சி மற்றும் இந்திய கலாச்சாரத்தின் பெருமையை பாதுகாப்பதில் அவரது உறுதிப்பாடு போற்றத்தக்கது என்றும், அவரது தியாகமும் தொலைநோக்கு தலைமையும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்