Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 31 Dec 2025

குடியரசு தின விழாவில் முதன்முறையாக ராணுவ விலங்குகள் அணிவகுப்பு | தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கும் அனுமதி

புதுடில்லி:
நாட்டின் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டில்லியில் நடைபெறவுள்ள அணிவகுப்பில் ஒரு முக்கியமான புதுமை இடம்பெற உள்ளது. முதன்முறையாக இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சிப் பிரிவில் இடம்பெறும் விலங்குகள் அணிவகுப்பாக பங்கேற்க உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பும், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறுவது வழக்கம். இதில், மாநிலங்களின் சாதனைகள், கலாசாரம் மற்றும் வளர்ச்சி திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன.

வரும் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி உட்பட 9 மாநிலங்களின் ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி ‘பசுமை மின் சக்தி’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு விழாவில் இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சிப் பிரிவைச் சேர்ந்த விலங்குகள் அணிவகுப்பில் கலந்துகொள்ள உள்ளன. இதில் இரண்டு பாக்ட்ரியன் இன ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் இன குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன நாய்கள் மற்றும் தற்போது சேவையில் உள்ள ஆறு ராணுவ நாய்கள் இடம்பெறுகின்றன. இந்த அணிவகுப்பு பார்வையாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்