Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
தொழில்நுட்பம் • 18 Jan 2026

முதலீடுகளை ஈர்க்க தவறும் தமிழகம் – ‘தொழில்நுட்பம் 2026’ மாநாட்டில் கவர்னர் ரவி கவலை

சென்னையில் நடைபெற்ற ‘பாரதத்துக்கான தொழில்நுட்பம் 2026’ மாநாட்டில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றினார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பொறியாளர்கள் உருவாகி வருவதாகவும், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும், பதிவு செய்யப்படும் காப்புரிமைகளின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வலுவான மனித வளம் மற்றும் புதுமை திறன் இருந்தபோதிலும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதாக கவர்னர் சுட்டிக்காட்டினார். வெளிப்படையான மற்றும் மறைமுகமான செலவுகள் காரணமாக பல தொழில்நிறுவனங்கள் பிற மாநிலங்களை நோக்கி நகர்வதாகவும், தமிழகத்தில் தொடங்கப்படும் பல தொழில்முனைவு முயற்சிகள் வளர்ச்சிக்காக வெளியே செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களும் தமிழகத்திலேயே விரிவுபடுத்த ஆர்வம் காட்டாத நிலை காணப்படுவதாக கூறிய கவர்னர், இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக விமர்சித்தார்.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கிடையே கல்வித்தரத்தில் உள்ள இடைவெளியை சுட்டிக்காட்டிய அவர், மாநில அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் தரத்தை உயர்த்த அவசர சீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தினார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்