உடனடி செய்தி

30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட NEET வினாத்தாள்: 5 பேர் கைது

30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட NEET வினாத்தாள்: 5 பேர் கைது
புதுடில்லியில் வெளிச்சத்துக்கு வந்துள்ள NEET வினாத்தாள் கசிவு வழக்கு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், Central Bureau of Investigation விசாரணையில் ராஜஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான NEET-ஐ National Testing Agency நடத்துகிறது. இந்தாண்டு தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கேள்வித்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மஹாராஷ்டிராவின் நாசிக்கில் அச்சிடப்பட்ட கேள்வித்தாள், ராஜஸ்தான் வழியாக பல மாநிலங்களுக்கு கசிந்தது தெரியவந்துள்ளது. குருகிராமில் உள்ள டாக்டர் மூலம், தொழிலதிபர்கள் இந்த வினாத்தாளை ரூ.30 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து, அந்த வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’ மூலம் மாணவர்களுக்கும், பயிற்சி மையங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ராஜஸ்தானில் மட்டும் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர், கேரளா, பீஹார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் இந்த கசிவு சென்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பலரிடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
1 நாட்கள் முன்பு
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
1 நாட்கள் முன்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
1 நாட்கள் முன்பு
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்