உடனடி செய்தி

அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு முன் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; பழனிசாமி புதிய வியூகம்?

அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு முன் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; பழனிசாமி புதிய வியூகம்?
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணிகள் குறித்து அவர் விவாதித்தார். கூட்டத்தில் பேசிய அவர், கட்சியை விட்டு விலகுபவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், தொண்டர்களின் ஆதரவால் உருவான கட்சியை யாராலும் பலவீனப்படுத்த முடியாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதன் மூலம் மாவட்ட அளவிலான ஆதரவு நிலவரத்தை மதிப்பீடு செய்யும் பணியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி விதிகளின்படி ஆண்டுக்கு இருமுறை செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதால், ஆகஸ்ட் மாதத்திற்குள் அந்த கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவை உறுதிப்படுத்திய பிறகே செயற்குழுவை கூட்டும் வகையில் கட்சி தலைமை திட்டமிட்டு வருவதாக கட்சி வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் குறித்து பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; நிபந்தனை ஜாமின்
முதல்வர் குறித்து பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; நிபந்தனை ஜாமின்
17 மணி நேரங்கள் முன்பு
குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது சதி முறியடிப்பு; 8 பேர் கைது, டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்
குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது சதி முறியடிப்பு; 8 பேர் கைது, டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்
17 மணி நேரங்கள் முன்பு
பொள்ளாச்சியில் ஜூலை 12ல் 'வீ தி லீடர்ஸ்' முதல் மாநாடு: அண்ணாமலை அறிவிப்பு
பொள்ளாச்சியில் ஜூலை 12ல் 'வீ தி லீடர்ஸ்' முதல் மாநாடு: அண்ணாமலை அறிவிப்பு
1 நாட்கள் முன்பு
அமோனியா கசிவு தொழிற்சாலை: நாளை முதல் வாயு அகற்றும் பணி; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
அமோனியா கசிவு தொழிற்சாலை: நாளை முதல் வாயு அகற்றும் பணி; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்