அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு முன் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; பழனிசாமி புதிய வியூகம்?
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணிகள் குறித்து அவர் விவாதித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், கட்சியை விட்டு விலகுபவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், தொண்டர்களின் ஆதரவால் உருவான கட்சியை யாராலும் பலவீனப்படுத்த முடியாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த சில நாட்களில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதன் மூலம் மாவட்ட அளவிலான ஆதரவு நிலவரத்தை மதிப்பீடு செய்யும் பணியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி விதிகளின்படி ஆண்டுக்கு இருமுறை செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதால், ஆகஸ்ட் மாதத்திற்குள் அந்த கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவை உறுதிப்படுத்திய பிறகே செயற்குழுவை கூட்டும் வகையில் கட்சி தலைமை திட்டமிட்டு வருவதாக கட்சி வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
100% உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான விக்ரம்-1 வெற்றி
4 மணி நேரங்கள் முன்பு
தவெகவில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை? அதிமுக நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
4 மணி நேரங்கள் முன்பு
பழநி கோவில் நில மோசடி: பல மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
5 மணி நேரங்கள் முன்பு
அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து வழக்கு தொடர்ந்த த.வெ.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
5 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்