அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு: ரூ.77.85 லட்சம், தங்கம் பறிமுதல்; விசாரணை தீவிரம்
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77.85 லட்சம் ரொக்கம், 11 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லவ்குஷ் மிஸ்ராவின் வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு, அவரது தந்தை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அவினாஷ் சுக்லா தங்கியிருந்த யோகா மையத்தில் இருந்த QR குறியீடு கொண்ட நன்கொடை பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கோவிலின் காணிக்கை எண்ணும் அறையில் இருந்து பணத்தை கண்காணிப்பு கேமரா குறைபாடுகளை பயன்படுத்தி திருடி, கோவில் வளாகத்திலேயே மறைத்து பின்னர் வெளியே எடுத்துச் சென்றதாக அவினாஷ் சுக்லா வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலர் சம்பத் ராயிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மறுபுறம், அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
எம்.எல்.ஏ. ராஜினாமா விவகாரம்: முதல்வர் மீது நடவடிக்கை கோரி கவர்னருக்கு திமுக கடிதம்
16 மணி நேரங்கள் முன்பு
உதவி பேராசிரியர் தேர்வில் புதிய சர்ச்சை: அடுத்தடுத்த பதிவு எண்களுக்கு ஒரே மதிப்பெண்?
16 மணி நேரங்கள் முன்பு
ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; மூடுவிழாவை நோக்கி 2,482 அரசு பள்ளிகள் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; மூடுவிழாவை நோக்கி 2,482 அரசு பள்ளிகள் Latest Tamil News Powered by:PlayStream தமிழகத்தில், 31ஆயிரத்து, 343 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 16
1 நாட்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: உணவுப் பொருள் தடைக்கு எதிர்ப்பு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்