உடனடி செய்தி

ஈரான் ஏவுகணையில் “இந்திய மக்களுக்கு நன்றி” – உலக நாடுகளை கவர்ந்த செய்தி

ஈரான் ஏவுகணையில் “இந்திய மக்களுக்கு நன்றி” – உலக நாடுகளை கவர்ந்த செய்தி
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேற்காசியாவில் போர் சூழ்நிலை தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், ஈரான் தனது ஏவுகணைகளில் “இந்திய மக்களுக்கு நன்றி” என எழுதியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் உடன் ஏற்பட்ட மோதலிலும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளிலும் பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், ஈரான் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா, ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏவுகணைகளில் வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ஈரான் தூதரகம் இந்தியா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு இந்தியா மக்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், போரை நிறுத்த வேண்டும் என நரேந்திர மோடி பலமுறை வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் குறித்து பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; நிபந்தனை ஜாமின்
முதல்வர் குறித்து பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; நிபந்தனை ஜாமின்
23 மணி நேரங்கள் முன்பு
அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு முன் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; பழனிசாமி புதிய வியூகம்?
அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு முன் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; பழனிசாமி புதிய வியூகம்?
23 மணி நேரங்கள் முன்பு
குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது சதி முறியடிப்பு; 8 பேர் கைது, டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்
குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது சதி முறியடிப்பு; 8 பேர் கைது, டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல்
23 மணி நேரங்கள் முன்பு
பொள்ளாச்சியில் ஜூலை 12ல் 'வீ தி லீடர்ஸ்' முதல் மாநாடு: அண்ணாமலை அறிவிப்பு
பொள்ளாச்சியில் ஜூலை 12ல் 'வீ தி லீடர்ஸ்' முதல் மாநாடு: அண்ணாமலை அறிவிப்பு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்