கர்நாடக அரசு முடிவு: ஹிஜாப் தடை நீக்கம்
பெங்களூருவில், Government of Karnataka கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவின் மூலம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு உடுப்பி பகுதியில் உள்ள அரசு பி.யு. கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவியர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியரும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த காலகட்டத்தில், Bharatiya Janata Party தலைமையிலான அரசு, கல்வி நிறுவனங்களில் சீருடை மட்டும் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, மத அடையாள ஆடைகளுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய Indian National Congress தலைமையிலான கர்நாடக அரசு, 2022ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.
புதிய வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் சீருடையுடன் ஹிஜாப் அணிந்து வரலாம். மேலும், பூணூல், சிவதாரா, ருத்ராட்சம் போன்ற மத அடையாளங்களையும் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை இவற்றை அணியவும் அல்லது அகற்றவும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; மூடுவிழாவை நோக்கி 2,482 அரசு பள்ளிகள் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; மூடுவிழாவை நோக்கி 2,482 அரசு பள்ளிகள் Latest Tamil News Powered by:PlayStream தமிழகத்தில், 31ஆயிரத்து, 343 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 16
21 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: உணவுப் பொருள் தடைக்கு எதிர்ப்பு
21 மணி நேரங்கள் முன்பு
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தை தடுக்க கோரிக்கை: ஹிந்து முன்னணி போலீசில் நடவடிக்கை வலியுறுத்தல்
21 மணி நேரங்கள் முன்பு
தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: சீரக சம்பா கிலோ ரூ.180-ஐ எட்டியது
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்