செய்திகள்
⚡ உடனடி செய்தி
கோவை கோவில்களில் கண்காணிப்பு தீவிரம் | அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
திருச்செந்தூரில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையில் மூன்று பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீசுவரர் கோவில், காரமடை அரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களிடம் தரிசன வசதிக்காக முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பக்தர்களின் குறைகளை நேரடியாக பதிவு செய்யும் வகையில் முக்கிய கோவில்களில் புகார் தொடர்பு விவரங்கள் கொண்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அறநிலையத்துறை தலைமை அலுவலகம் அல்லது கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
36 நாள் நீண்ட நீட் போராட்டம் முடிவுக்கு வந்தது; சிஜேபி போராட்டத்தை வாபஸ் பெற்றது
6 மணி நேரங்கள் முன்பு
'அ.ம.மு.க. என் வசமே உள்ளது' – தினகரனுக்கு எதிராக மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் அதிரடி பேட்டி
6 மணி நேரங்கள் முன்பு
வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை? ரூ.10 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டம்
1 நாட்கள் முன்பு
இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நன்றி: 'வீடியோவுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது'
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்