உடனடி செய்தி

புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சென்னை: பிரேமலதா விஜயகாந்த், புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழக முதல்வர் விஜய் குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டார். விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக சட்டசபையில் பதவி ஏற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் விஜய்க்கு முதலில் வாழ்த்துகள். அவர் பதவி ஏற்றது நேற்று தான். அதனால், அவருக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும்” என்றார். மேலும், “மக்களிடம் நேரம் கேட்டுள்ள விஜய்க்கு, நாங்களும் அவகாசம் தருகிறோம். அதன் பின்னர், தமிழக மக்களின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்து சட்டசபையில் வலியுறுத்துவோம்” என்றும் தெரிவித்தார். அதே சமயம், அரசு நிதிநிலை குறித்து முதல்வர் கூறியுள்ள கருத்துகள் பற்றி, அவரிடமே கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் கூறினார். இந்த அரசு முழு 5 ஆண்டுகள் நீடிக்குமா என்ற கேள்விக்கு, “இப்போது அதைப் பற்றி எதுவும் கூற முடியாது. எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரியாது. அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை பார்த்தே முடிவு சொல்ல முடியும்” என பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

த.வெ.க.வில் இணைந்த ஜெகத்ரட்சகன் மகன், வைகைச்செல்வன்; புதிய நிர்வாகிகளை சந்தித்த முதல்வர் விஜய்
த.வெ.க.வில் இணைந்த ஜெகத்ரட்சகன் மகன், வைகைச்செல்வன்; புதிய நிர்வாகிகளை சந்தித்த முதல்வர் விஜய்
3 மணி நேரங்கள் முன்பு
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் அதிகரிக்கும் கவலை
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் அதிகரிக்கும் கவலை
3 மணி நேரங்கள் முன்பு
கவர்னரை சந்தித்த திமுக, அதிமுக: த.வெ.க. அரசு மீது குதிரைப் பேரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள்
கவர்னரை சந்தித்த திமுக, அதிமுக: த.வெ.க. அரசு மீது குதிரைப் பேரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள்
3 மணி நேரங்கள் முன்பு
முதல்வர் குறித்து பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; நிபந்தனை ஜாமின்
முதல்வர் குறித்து பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; நிபந்தனை ஜாமின்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்