உடனடி செய்தி

புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சென்னை: பிரேமலதா விஜயகாந்த், புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழக முதல்வர் விஜய் குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டார். விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக சட்டசபையில் பதவி ஏற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் விஜய்க்கு முதலில் வாழ்த்துகள். அவர் பதவி ஏற்றது நேற்று தான். அதனால், அவருக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும்” என்றார். மேலும், “மக்களிடம் நேரம் கேட்டுள்ள விஜய்க்கு, நாங்களும் அவகாசம் தருகிறோம். அதன் பின்னர், தமிழக மக்களின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்து சட்டசபையில் வலியுறுத்துவோம்” என்றும் தெரிவித்தார். அதே சமயம், அரசு நிதிநிலை குறித்து முதல்வர் கூறியுள்ள கருத்துகள் பற்றி, அவரிடமே கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் கூறினார். இந்த அரசு முழு 5 ஆண்டுகள் நீடிக்குமா என்ற கேள்விக்கு, “இப்போது அதைப் பற்றி எதுவும் கூற முடியாது. எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரியாது. அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை பார்த்தே முடிவு சொல்ல முடியும்” என பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
1 நாட்கள் முன்பு
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
1 நாட்கள் முன்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
1 நாட்கள் முன்பு
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்