உடனடி செய்தி

நீட் ஆன்லைன் தேர்வு: கல்வியாளர்கள் வரவேற்பு, சிலர் எதிர்ப்பு

நீட் ஆன்லைன் தேர்வு: கல்வியாளர்கள் வரவேற்பு, சிலர் எதிர்ப்பு
நாடு முழுவதும் நடத்தப்படும் NEET தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என Dharmendra Pradhan அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பல கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படுவதால், வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஊரக பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் அதிவேக இணைய வசதி மற்றும் தடையற்ற மின்சாரம் அவசியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் முன்மாதிரி (mock) தேர்வுகளை நடத்தி, தொழில்நுட்ப சிக்கல்களை முன்கூட்டியே சரி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சில கல்வியாளர்கள், பயிற்சி மையங்களின் கட்டுப்பாடு இல்லாமையே முறைகேடுகளுக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால், இத்தகைய மையங்களுக்கு தரநிலைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் அவசியம் என கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினர், ஆன்லைன் தேர்வு மட்டுமே தீர்வு அல்ல என்றும், மாநிலங்களுக்கு தனித்தனி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
1 நாட்கள் முன்பு
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
1 நாட்கள் முன்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
1 நாட்கள் முன்பு
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்